வியாழன், 13 ஜூன், 2013

(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது


செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ,
ஆனா ,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு
எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக் வந்துதான் ஆகனும்.
இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,
என்னத்தான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

டிசம்பர் 31க்கும்,ஜனவரி 1க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்,
ஜனவரி 1க்கும்,டிசம்பர் 31க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??யோசிக்கனும்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக