வியாழன், 13 ஜூன், 2013

கண்கள் பராமரிப்பு

clip_image002உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது போலவே, நம் கண்களின் ஆரோக்கியமும் மிக முக்கியமாகும். கண்களைப் பராமரிப்பதற்கும், அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கும் சில வழிமுறைகளைக் காண்போம்.
கண்கள் பொன்னை விட மதிப்பானவை. அவற்றை பராமரிப்பதற்கும் நாம் நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம். சுத்தம், உணவு, சரியான நேரத்தில் பரிசோதனை, உடற்பயிற்சி போன்றவற்றால் நம் கண்களுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
உணவில் கவனம் தேவை..! * வாரம் இருமுறை உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது, முதுமையில் ஏற்படும் பார்வை பிரச்சனைகளை தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றது.
* சர்க்கரைவள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதினால், அதில் உள்ள 'வைட்டமின் ஏ' கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
* உணவில் உப்பின் அளவை குறைப்பது அவசியம். டின்னில் போட்டு வைக்கிற ஊறுகாய்,   தின்பண்டங்கள் போன்றவற்றை வாங்கும்போது, அவற்றில் 'நோ சால்ட்', 'நோ சோடியம்' லேபிள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
* வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்துகொள்வதனால் முதுமையில் கண்களில் ஏற்படும் பார்வைக் கோளாறைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
* பழங்களைக் கொண்டு பதப்படுத்திய ஜாம் சாப்பிடுவதால், முதுமையில் கண்களின் திரையில் ஏற்படுகின்ற பிரச்னையை தடுக்கலாம்.
* பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அடங்கியிருக்கின்றது. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது முதுமையில் கூட எவ்வித கோளாறுமின்றி கண்கள் நலமுடன் இருக்கும். குறிப்பாக, குளுகோமா நோயைத் தவிர்க்கலாம்.
* வருத்த உணவு பொருட்கள், இனிப்புப் பண்டங்கள் போன்றவை வயதானவர்களின் பார்வை கோளாறுக்கு முக்கிய் காரணமாகிறது. எனவே, இந்த உணவுப் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
* அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இதில் குளுகோமாவை எதிர்க்கும் ஆன்டியாக்சிடன்ட் மிகுதியாக உள்ளது.
* வாரம் இரண்டு நாட்களில் மீன் உணவு சாப்பிட வேண்டும். மீனில் இருந்து உடலுக்கு தேவையான 'ஒமேகா 3 பாடி ஆசிட்' கிடைக்கின்றது. நீங்கள் சைவ உணவை மட்டும் உட்கொள்பவராக இருந்தால், இதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிட்டால் போதுமானது.
உடற் பயிற்சியும் உடற் பரிசோதனையும்
* வாரத்தில் ஐந்து நாட்களில் அரை மணி நேரம் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இது, குளுகோமா கோளாறு உண்டாவதைத் தடுக்கிறது.
* தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஐந்து நிமிடம் கண்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது. கண்களை இடது - வலது புறமாகவும், மேலே - கீழேயும் அசைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். இப்படி செய்வதால் குளுகோமா கோளாறு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
* 50 வயதைத் தாண்டியவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் கூடுதலாக இருக்கின்றவர்கள் எல்லா மாதமும் பரிசோதனை செய்து மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம்.
* சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களுக்கு உண்டாகிற வறட்சியால் கண்களைப் பாதுகாப்பதற்காக சன் க்ளாஸ் அணிந்து கொள்ளலாம்.
* நீச்சல் செய்யும் போது கண்ணாடி அணிய வேண்டும். ஏனெனில், இது குளோரினில் இருந்து கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
* பயணம் செய்யும் போது கண்ணாடி அணிந்து கொண்டால், கண்களை தூசி, புகை போன்றவற்றில் இருந்தது பாதுகாத்துக் கொள்ளலாம்.
* சூரிய வெளிச்சத்தில் இருக்கிற புற ஊதாக் கதிர்கள் கண்களில் படாமல் இருக்க, பெரிய தொப்பியை தலையில் அணிவது நல்லது.
* வேலை செய்யும்போதும், படிக்கும் போதும் அரை மணி நேரம் இடைவெளியில் தூரமாக இருக்கின்ற பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தி, 30 நொடிகள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
* மல்லிகை பூ, பெப்பர்மின்ட், வெணிலா போன்ற இயற்கையான வாசனை திரவியங்களை அவ்வப்போது. இது, மூளை நன்றாக வேலை செய்வதற்கும், மங்கலான வெளிச்சத்தில் நன்றாக பார்ப்பதற்கும் நமக்கு பயன்தருகிறது.
* ஏ.சி, வெண்டிலேட்டர் போன்றவற்றை முகத்துக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும். இவை கண்களுக்கு மிகவும் கெடுதலாகும்.
* கண்களை சில மணி நேரம் இடைவெளியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் கண்களுக்குப் புத்துணர்வாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கண்களில் தூசி, அழுக்கு போன்றவை பதிந்துவிடாமல் தடுக்கின்றது.
* தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு போடப்பட்டிருந்த மேக்கப்பை அழிக்கவும். கண்களைச் சுத்தப்படுத்திய பிறகே தூங்கச் செல்ல வேண்டும்.
* சுத்தமான டவல் உபயோகிப்பது நல்லது. வேறொருவர் பயன்படுத்திய டவலை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இத்தகைய எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், கண்கள் இரண்டும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக