திங்கள், 24 செப்டம்பர், 2012

IAS, IPS, IFS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு

Prepare your Son/Daughter for IAS, IPS, IFS Exam from Today !!!

IAS, IPS, IFS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு!

இந்த வருடம் UPSC எழுதும் சகோதரர்கள் கவனத்திற்கு நீங்கள் இத்தேர்வுக்கு தயாராக சில குறிப்பு புத்தகங்களை கிழே வரிசை படித்தி இருக்கின்றோம்.
 
முழு ஈடுபாடுடன் உங்களை தயார்ப்படுத்துங்கள் நீச்சயமாக நம்மாலும் IAS ,IPS, IFS ஆக முடியும் இன்ஷா அல்லாஹ்
 
1. இந்திய வரலாறு (Indian History – India Struggle for Independence )
பிபின் சந்திரா ( Bipin Chandra)
NCERT Books ( XI & XII )
புவியியல் (Geography ) Spectrum Books (P) Ltd.
 
2. இந்திய கொள்கைகள்(Indian Policy – Constitution Of India )
பக்ஷி (Bakshi)
 
3. இந்திய பொருளாதாராம் (Indian Economy )
பிரதியோகிதா தார்பனின்தியா (Pratiyogita Darpaninthia)
XI & XII – Plus One, Plus Two Books,
 
4. பொது அறிவியல் (General Science )
Tata Mc Graw Hill Guide
 
5. மனத்திறன் (Mental Ability – Quantitative Aptitude)
R.S. Aggarwal
 
6. நாட்டு நடப்புக்கு சில செய்தி தாள்கள் , வர மற்றும் மாத இதழ்கள்
(Current Affairs – Some magazines and Newspapers )
i. The Hindu/The Times of India
ii. Frontline
iii. Civil Service Chronicle
iv. Chanakya
v. Competition WIZARD
vi. Civil Services Today
 
7. வழிகாட்டி நூல்கள் (Guides)
1. Tata Mc Graw Hill
2. Spectrum
3. Unique
 
Jazakallah Khairan to Br.S N Ahamed Ibrahim B.Tech

பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது

Born Chikens
00:02:16
Added on 20-07-2011
24,364 views
 
 
பிராயிலர் கோழி சாப்பிடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்..அல்லது குறைத்து கொள்ளுங்கள்...
 
 
"பிராய்லர் கோழி" இறைச்சி வடிவில் ஒரு "எமன்".
 
Alternate Solution நாட்டுக்கோழி or Mutton or Beef
 
நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.


40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.


பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.


ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.


6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.


பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.


நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.


பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை
.

இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.



சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.


இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம்.


http://www.youtube.com/watch?v=99VeH0-R9Ro&feature=player_embedded



எனவே

பிராயிலர் கோழி சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்..

அல்லது நிறுத்தி கொள்ளுங்கள்...

பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?

பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?
குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சுசிலாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண்கள் இருவரும் பதினாறு வயதில்தான் பருவமடைந்தார்கள். மூன்றாவது பெண் பத்து வயதில் உட்கார்ந்துவிட்டாள். சின்னமகள் வயதுக்கு வந்ததை வெளியில் சொல்ல வெட்கப்பட்ட தாய், மகளை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.

""எங்க பரம்பரையில யாருமே 15 வயதுக்கு முன்னால பூப்படையமாட்டாங்க. இவள் 10 வயசுல வந்துட்டாள். ஏதாவது நோய் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர்.''

சிறுமியை பரிசோதித்த டாக்டர், ""புள்ளைக்கு உடம்புல புரோட்டின் சத்து அதிகமாட்டு இருக்கு. பிராய்லர் கோழி இறைச்சியில அதிக புரோட்டின் இருக்கு. அதை அதிகம் சாப்பிட்டால் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு'' என்றார் டாக்டர்..

""ஆமாம் டாக்டர், பெரிய பொண்ணுங்களைவிட இவள் பிராய்லரை விரும்பிச் சாப்பிடுவாள். கோழி இறைச்சி இல்லைன்னா இவளுக்கு சாப்பாடு இறங்காது'' என்றார் சுசிலா.

இதே ஊரைச்சேர்ந்த கோகிலவாணியின் மகளும் 10 வயதில் வயதுக்கு வந்துவிட்டாள். (Your family too some daughters early happened like this)

பாஸ்ட்ஃபுட் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் இந்த வளர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமோ? சந்தேகப்பட்ட கோகிலவாணி மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

""பாஸ்ட்ஃபுட் சாப்பிட்டால் உடல் பருமனாகும். பருவத்திற்கு வரமாட்டாள். பிராய்லர் கோழி விரும்பிப் சாப்பிடுவாளா உங்கள் பெண்?'' -திருப்பிக் கேட்டார் பெண் மருத்துவர்.

""கோழிதான் காரணமா டாக்டர்?''

""கோழிக்கு போடுகிற ஊசி மருந்து காரணமாக இருக்கும்'' என்றார் டாக்டர்.

தற்போது பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடு வதை இந்தப் பகுதி மக்கள் வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பிராய்லர்கள்தான் காயத்ரி தேவி என்ற ஆரம்பப் பள்ளி மாணவியையும் தாய்மைக்கு தயாராக்கி யுள்ளது.

""10 வருடத்திற்கு முன்பு நகர்ப் புறத்து மக்கள் பிராய்லர் இறைச்சி யை விரும்பிச் சாப்பிட்டனர். இப்போது பிராய்லர் இறைச்சிக்கடை இல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு விற்பனையாகிக்கொண்டிருக் கிறது.

பிராய்லர் கோழிகள் சீக்கிரம் பெருக்கவேண்டும், எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார் கள்.
இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது.

இது ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறாô சமூக ஆர்வலர் சேம்ஜி. இது .உண்மை தானா?

பட்டுக்கோட்டை அரசு கால் நடை மருந்தக மருத்துவர் பெயர் வேண்டாம் என்ற கண்டிஷனோடு பதில் சொன்னார்.

""தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளவை கோழிகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகள்தான். கோழி வளர்ச் சிக்கான மருந்துகள் அல்ல. வெளி நாடுகளில் இறைச்சிக்காக வளர்க்கப் படும் பன்றி மற்றும் மாடுகளுக்கு குறுகிய நாளில் வளர்ச்சியடைய ஊசிகள் போடு வது வழக்கம். சில மாதங்களில் கொழுகொழுவென வளர்ந்துவிடும். இந்தியாவில் அத் தகைய மருந்துகள் பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் அந்த மருந்துகளின் விலை அதிகம். ஆனால் பிராய்லர் இறைச்சியில் அதிகம் புரதச் சத்து இருப்பது உண்மை'' என்றார்.

கால்நடைகள் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவரிடம் நாம் இந்த "சிறுமிகள் பூப்படையும்' பிரச்சனை பற்றி கேட்டபோது...

""இந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. தென் மாவட்டங்களில் பிராய்லர் கோழியை அறிமுகப் படுத்தியதே நான்தான். அப்ப ஒரு பிராய்லர் கோழியின் அதிகபட்ச எடை ஒண்ணேகால் கிலோதான் இருக்கும். சிறிது காலத்தில் பெரு முதலாளிகள் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டனர்.

அவர்கள்தான் குஞ்சு, தீவனம், ஊசி என்று நேரடியாக கொடுத்து கோழி வளர்க்கச் சொல்லி கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புகிறார் கள். முதலில் இந்திய முறைப்படிதான் பிராய்லர் ஜீன் தயாரிக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து தாய்க் கோழி வாங்கி வந்து உற்பத்தி செய்கிறார்கள். மருந்து களும் வெளிநாட்டு ஃபார்முலாதான். விவசாயத்திற்கு அமெரிக்க விதைகள் நுழைந்ததைப் போல கோழி மற்றும் பசுமாடுகளும் நுழைந்துவிட்டது.

வெளிநாட்டு ஃபார்முலாப்படி 45 நாளில் 2 கிலோ எடைக்கு வந்துவிடுகிறது பிராய்லர் கோழி. நிச்சயம் இதனால் பாதிப்புதான். இதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டால் ஒரேநாளில் பிராய்லர் கோழி விற்பனை படுத்துவிடும். அதனால் தான் நாட்டுக்கோழி வளர்க்குமாறு நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். 10 வயதில் ஒரு சிறுமி பெரிய மனுஷியா வதற்கு பிராய் லர் இறைச்சியும் முக்கியமான காரணமாக இருக்கலாம்'' என்கிறார் பெயர்கூற விரும்பாத ஆய்வு மைய பேராசிரியர்.

தமிழக சுகாதாரத்துறை அவசர அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது
.
 

மொபைல் கோபுரம் அருகில் வசிக்கிறீர்களா? மூளை பாதிக்கப்படும்

மொபைல் கோபுரம் அருகில் வசிக்கிறீர்களா? மூளை பாதிக்கப்படும்

by vayal

 உங்களுடைய வீடு அல்லது வேலை பார்க்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில், மொபைல் போன் சிக்னல்களை வாங்கி அனுப்பும் டவர்கள் இருக்கின்றனவா? இது மைக்ரோவேவ் அடுப்பின் உள்ளே 24 மணி நேரம் இருப்பதற்கு சமம் என்று மும்பையில் உள்ள ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் கிரிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்ற 2010 டிசம்பரில் இவர் இந்த ஆய்வு முடிவினை மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ஓர் அறிக்கையில் அளித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பல துறைகளுக்கான அமைச்சரவை இணைந்து, மொபைல் போன் டவரின் மின் காந்த அலைக்கதிர் வெளிப்பாட்டினைக் 450 mw/sq m என்ற அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தன. ஆனால், இன்றுவரை இது அமல்படுத்தப்படவில்லை என பேரா. குமார் தெரிவித்துள்ளார். 
இது சார்ந்து மேற்கொண்ட இன்னொரு ஆய்வில், இந்த கோபுரங்கள் அருகே வசிப்பவர்களில் ஒரு சிலருக்கு மூளையில் கேன்சர் நோய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், மிக அருகே வசிப்பவர்களுக்கு, தூக்கமின்மை, தலைவலி, மயக்கம், மூட்டுவலி போன்றவையும் வரலாம்.
தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் கட்டி போன்றவை வர வாய்ப்புள்ளதாக, புது டில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் அறுவை மருத்துவர் டாக்டர் சமீர் கௌல் தெரிவித்துள்ளார். 
இந்த பாதிப்பு மென்மையான தலை ஓட்டினைக் கொண்டுள்ள சிறுவர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால், மொபைல் போன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான அமைப்பு இதனை மறுத்துள்ளது. அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் கதிர்வீச்சுடன்தான் தற்போது மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே பாதிப்பு வர வாய்ப்பில்லை என்று அந்த அமைப்பின் முதன்மை இயக்குநர் மாத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார். 

கோபுரங்கள் பாதுகாப்பாகத்தான் இயங்குகின்றன என்றால், ஏன் அது குறித்து இத்தனை சட்டங்களும், ஆய்வுகளும் இருக்கின்றன என்று பொது நல அமைப்பாளர்கள் கேட்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள், கோபுரங்கள் உள்ள இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.
நன்றி : உங்களுக்காக 
--
With Best Regards,
Umar Farook
 
மொபைல் கோபுரங்களை மக்கள் குடியிருப்பு பகுதிகளை விட்டு அப்புறப்படுத்தி வேறு இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். தொடர் கோரிக்கை மற்றும் போராட்ட நடவடிக்கை மூலம் மட்டுமே இந்த வெகுஜன பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும்.இதற்கான முன் முயற்சியை நாம் அனைவரும் இணைந்து செய்வோம், இன்ஷா அல்லாஹ்
 

மூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்

மூட்டுவலிக்கு நிவாரணமளிக்கும் அத்திப்பால்!

Health Benefits of Figs - Food Habits and Nutrition Guide in Tamil
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
* அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
* அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
* முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைக்வள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
* அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.
* அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.
* அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
* அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.