கல்வியிருந்தால் மட்டும் போதுமா?
ஒன்பது மணி நேர்முக தேர்விற்காக 8.50 மணிக்கு சரியாய் ஆஜரானான் ராமு. ஆனாலும் பதட்டத்துடனேயே அமர்ந்திருந்தான். அவனருகே ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தனர். அவர்களெல்லாம் ஆங்கிலத்திலேயே உரையாடி கொண்டிருந்தனர். ராமுவின் அருகே இன்னொரு இளைஞன் அமர்ந்து கொண்டான். ராமுவிற்கோ பதட்டம் அதிகரித்தது. ஏனெனில் நான் இந்த நேர்முக தேர்விற்கு தகுதியானவனா என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று ராமுவின் அருகிலிருந்தவன் தும்ம ஆரம்பித்தான். விடாத தும்மல்! சுற்றியும் அமர்ந்திருந்தவர்களில் சிலர் முகம் சுளித்துக் கொண்டனர். இதென்னடா தலைவலியென்று சலித்துக் கொண்டனர். கைக்குட்டை அங்கிருந்தவர்களிடம் இருந்தாலும், அதனை கொடுக்க எவர்க்கும் மனம் வரவில்லை. ராமுவோ தன்னிடம் இருந்த கைக்குட்டையை உடனே கொடுத்தான். “இதை உபயோகிச்சுக் கோங்க…” என்று ராமு கொடுக்க, அவசர அவசரமாய் அதனை வாங்கிக் கொண்டான்.
‘இங்க சுந்தர் யாருங்க? அடுத்து நீங்கதான்!” என்று ஒருவன் கூறிச் சென்றான். தும்மிக் கொண்டிருந்தவன் எழுந்து உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் ராமு உள்ளே அழைக்கப் பட்டான். அவனது பைல்களை புரட்டிப் பார்த்த அந்த முதியவர். “யூ ஆர் அப்பாயின்டேட்!” என்றார் முக மலர்ச்சியுடன்! ராமுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சட்டென்று உள்ளே சுந்தர் வந்தான். “சார்! அப்போ மத்தவங்கள…” என்று அவன் வினவ, “அவங்கள அனுப்பிச்சிடுங்க” என்றார் அந்த முதியவர், மீண்டும் முக மலர்ச்சியோடு! வெளியே வந்த ராமு அங்கிருந்த வேலையாளிடம் “யார் அந்த சுந்தர்” என்று வினவியதற்கு, “அவரும் இந்த அலுவலகத்தில் ஒரு உறுப்பினர்” என்று பதில் வந்தது.
ஒன்பது மணி நேர்முக தேர்விற்காக 8.50 மணிக்கு சரியாய் ஆஜரானான் ராமு. ஆனாலும் பதட்டத்துடனேயே அமர்ந்திருந்தான். அவனருகே ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தனர். அவர்களெல்லாம் ஆங்கிலத்திலேயே உரையாடி கொண்டிருந்தனர். ராமுவின் அருகே இன்னொரு இளைஞன் அமர்ந்து கொண்டான். ராமுவிற்கோ பதட்டம் அதிகரித்தது. ஏனெனில் நான் இந்த நேர்முக தேர்விற்கு தகுதியானவனா என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று ராமுவின் அருகிலிருந்தவன் தும்ம ஆரம்பித்தான். விடாத தும்மல்! சுற்றியும் அமர்ந்திருந்தவர்களில் சிலர் முகம் சுளித்துக் கொண்டனர். இதென்னடா தலைவலியென்று சலித்துக் கொண்டனர். கைக்குட்டை அங்கிருந்தவர்களிடம் இருந்தாலும், அதனை கொடுக்க எவர்க்கும் மனம் வரவில்லை. ராமுவோ தன்னிடம் இருந்த கைக்குட்டையை உடனே கொடுத்தான். “இதை உபயோகிச்சுக் கோங்க…” என்று ராமு கொடுக்க, அவசர அவசரமாய் அதனை வாங்கிக் கொண்டான்.
‘இங்க சுந்தர் யாருங்க? அடுத்து நீங்கதான்!” என்று ஒருவன் கூறிச் சென்றான். தும்மிக் கொண்டிருந்தவன் எழுந்து உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் ராமு உள்ளே அழைக்கப் பட்டான். அவனது பைல்களை புரட்டிப் பார்த்த அந்த முதியவர். “யூ ஆர் அப்பாயின்டேட்!” என்றார் முக மலர்ச்சியுடன்! ராமுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சட்டென்று உள்ளே சுந்தர் வந்தான். “சார்! அப்போ மத்தவங்கள…” என்று அவன் வினவ, “அவங்கள அனுப்பிச்சிடுங்க” என்றார் அந்த முதியவர், மீண்டும் முக மலர்ச்சியோடு! வெளியே வந்த ராமு அங்கிருந்த வேலையாளிடம் “யார் அந்த சுந்தர்” என்று வினவியதற்கு, “அவரும் இந்த அலுவலகத்தில் ஒரு உறுப்பினர்” என்று பதில் வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக