வெள்ளி, 13 ஏப்ரல், 2012

ஜப்பானிய காடை வளர்ப்பு







காடை வளர்ப்பு குறித்து அவர் கூறியது: காடைகள் பொதுவாக இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது. எந்த பறவைகளை வீடுகளில் வளர்த்தாலும் அதனைப் பார்த்து ரசிப்பதன் மூலம் பலருக்கு மன அழுத்தம் குறையும்.
தமிழகத்தில் அதிகளவில் வளர்க்கப்படுவது ஜப்பானிய காடைகளே. இவை 5 முதல் 6 வாரத்துக்குள் முழு வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு தயாராகின்றன. ஜப்பானிய காடைகளுக்கு 6 வார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் செலவும் குறைவு.
காடைகளை இரும்பு கூண்டுகள் அல்லது தரையில் தனித் தனி அறைகள் போல் தடுப்பு அமைத்தும் வளர்க்க முடியும்.
காடை இறைச்சியில் அதிகப்புரதமும் (20.5 சதவீதமும்) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (5.8 சதவீதம்) இருப்பதால் அதிகளவு மக்கள் காடை இறைச்சியை உட்கொள்கின்றனர்.
காடைகள் 7 வாரத்திலேயே முட்டை இடுவதால் அதன் மூலமும் அதிகளவு உற்பத்தி பெருகும். ஒரு காடை பராமரிப்புச் செலவு 7.50 ரூபாய் வரை ஆகும். ஒரு காடை 10 ரூபாய் வரை விற்கப்படுவதால் காடை வளர்ப்பு மூலம் போதிய அளவு வருமானம் ஈட்டுவதுடன் வீட்டினுள் இயற்கைச் சூழலும் நிலையாக இருக்கும் என்றார்.
காடை வளர்ப்பு குறித்து மேலும் விளக்கம் பெற திரூர் வேளாண் நெல் ஆராய்சி நிலையத்தை நேரிலும், 27620705 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம் என்று நிர்மலாதேவி கூறினார்.
தினமணி தகவல் – நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர், வேளாண் நெல் ஆராய்ச்சி நிலையம், திருவள்ளூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக